கொரோனா தீவிர சிகிச்சை பெறப்படும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருத்து பயன்படுகிறது. இம்மருந்து சென்னை கீழ்பாக்கத்தில் வழங்கப்பட்டு வந்தது. பிற மாவட்டங்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து அனுப்பப்பட்ட நிலையிலும் தற்போது கீழ்ப்பாக்கத்தில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
மருத்துக்ககாக அலைமோதும் மக்கள்:
கொடிய வைரஸான கொரோனா இறுதி நிலையில் உயிரை காக்கும் மருந்தான ரெம்டெசிவிர் வாங்க மக்கள் அலைமோதுகின்றனர். இம்மருந்து துவக்கத்தில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் அரசு மருத்துவக்கல்லூரியில் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் பின் ரெம்டெசிவிர் மருந்தின் தேவை அதிகமாக இருப்பதனால் அதனை அடுத்து, நெல்லை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய ஐந்து இடங்களில் ரெம்டெசிவிர் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் மதுரை ,கோவை போன்ற இடங்களில் கொரோனா தாக்கம் அதிகமாக இருபதனால் மக்கள் மீண்டும் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவ கால்லூரியில் மருந்துக்காக வரிசையில் காத்திருக்க துவங்கியுள்ளனர். இதனால் சென்னையில் வழக்கம்போல கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ரெம்டெசிவிர் மருந்தானது வழக்கமாக நாள் ஒன்றுக்கு 500 பேருக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 250 பேருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் மக்கள் கூட்டம் செல்கிறது.