கீழ்ப்பாக்கத்தில் இருந்து நேரு ஸ்டேடியத்திற்கு ரெம்டெசிவிர் மருந்து விற்பனை மாற்றம் : தமிழக அரசு தகவல்

0
கீழ்ப்பாக்கத்தில் இருந்து நேரு ஸ்டேடியத்திற்கு ரெம்டெசிவிர் மருந்து விற்பனை மாற்றம் : தமிழக அரசு தகவல்
கீழ்ப்பாக்கத்தில் இருந்து நேரு ஸ்டேடியத்திற்கு ரெம்டெசிவிர் மருந்து விற்பனை மாற்றம் : தமிழக அரசு தகவல்

கீழ்ப்பாக்கத்தில் இருந்து நேரு ஸ்டேடியத்திற்கு ரெம்டெசிவிர் மருந்து விற்பனை மாற்றம் : தமிழக அரசு தகவல்

ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தற்போது கீழ்ப்பாக்கத்தில் இருந்து நேரு ஸ்டேடியத்திற்கு மாற்றப்படுவதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து தற்சமயம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் நோயாளிகளின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதால் அந்த மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. சென்னையில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த இம்மருந்து தற்போது மதுரை மற்றும் சில மாவட்டங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் கீழ்ப்பாக்கத்தில் மட்டுமே அமைந்துள்ள மையத்தில் இம்மருந்தை வாங்குவதற்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் குடுமப உறுப்பினர்கள் கூட்ட நெரிசலில் அலைமோதி மணிக்கணக்கில் நின்று வாங்கி செல்கின்றனர். இதனால் அவ்விடத்தில் கூட்டம் அதிகமாவதால் கொரோனா தொற்று அதிகளவில் பரவ வாய்ப்புள்ளது. எனவே தற்போது ரெம்டெசிவிர் மருந்து விற்பனை கீழ்ப்பாக்கத்தில் இருந்து நேரு ஸ்டேடியத்திற்கு மாற்றப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கூட்டத்தை தவிர்ப்பதற்க்காக நேரு ஸ்டேடியத்தில் கூடுதல் மையங்கள் அமைக்கப்படும் எனவும் உயர நீதி மன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது. உயர் நீதிமன்றம் அரசு எடுக்கும் இந்த நடவடிக்கை திருப்தி அளிக்கும் வகையில் உள்ளதாக கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here