இந்தியாவின் பிரபல தொழித்துறை நிறுவனமான ரிலையன்ஸ் மலிவு விலையிலான 5ஜி ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்த முடிவெடுத்துள்ளது. இதற்கான பேச்சு வார்த்தை முடிவடைந்த பின்பு அறிவிப்புகள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
மலிவு விலையில் ஸ்மார்ட் போன்
இந்தியாவில் தொழில்த்துறை நுட்பத்தில் முதலிடத்தில் இருக்கும் நிறுவனம் ரிலையன்ஸ். தொழிலதிபர் அம்பானி தொழில் துவங்கிய காலத்தில் ரிலையன்ஸ் டெக்ஸ்டைல் நிறுவனமாகத்தான் ஆரம்பிக்கப்பட்டது. அதில் கிடைத்த லாபம் மற்றும் வளர்ச்சியினால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸாக மாறியது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் முகேஷ் அம்பானியின் வருமானம் மட்டும் லட்சம் கோடிக்கும் அதிகம்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் மற்றுமொரு தயாரிப்பு தான் ஜியோ. சில ஆண்டுகளுக்கு முன்னதாக அறிமுகமான ஜியோ தொழில்நுட்பம் அதுவரை இந்திய மக்களின் பயன்பாட்டில் இருந்து வந்த ஏர்செல், வோடாபோன், ஏர்டெல் போன்ற முன்னணி நிறுவனங்களை ஓரம் கட்டியது. இலவசமான டேட்டா பேக், மலிவு விலையில் ஜியோ போன் என்ற அறிவிப்புகளை அறிவித்து, மக்களை தன் பக்கமாக ஈர்த்தது ரிலையன்ஸ் ஜியோ.
சினிமா பட பாணியில் தங்கம் கடத்தல் – போலீசாரின் வலையில் சிக்கிய கும்பல்!!
இந்நிலையில் அடுத்த ஆண்டிற்குள் மலிவு விலையில் கிடைக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தவுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம். அதற்கான வேலைகளும் தீவிரமாக நடந்து வருகிறது. ரிலையன்ஸின் இந்த அறிவிப்பால் மற்ற நிறுவனங்கள் சற்று அதிருப்தியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.