தொடர்ந்து தனது பங்குச்சந்தை மதிப்பை கூட்டி வந்த ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது உலகில் 2 வது பெரிய எரிசக்தி நிறுவனமாக மாறியுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம்:
ரிலையன்ஸ் நிறுவனம், இந்தியாவை சேர்ந்த முகேஷ் அம்பானி அவர்களால் நிறுவப்பட்டு இப்பொது சிறந்த நிறுவனமாக உள்ளது. இந்த ஆண்டு பங்குச்சந்தை புள்ளிகளில் தொடர்ந்து முன்னேறி வந்தது. சந்தை மதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வந்த நிலையில், கடந்த வெள்ளி அன்று பங்குச்சந்தை மதிப்பில் 4.3 சதவீதமாக உயர்ந்தது.
துல்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
இதன் மூலம், ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த மதிப்பு 189 டாலர்களாக உயர்ந்து உள்ளது. இந்த தரவு அமைப்பினால், ரிலையன்ஸ் நிறுவனம் உலகின் இரண்டாவது பெரிய எரிசக்தி உருவாக்கும் நிறுவனமாக உயர்ந்து உள்ளது.
எரிசக்தி நிறுவனம்:
தற்போது, எக்ஸான் மொபில் என்ற நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி, முன்னேறியுள்ளது. சவுதி ஆரம்கோ என்ற நிறுவனம் முதல் இடத்தில உள்ளது. இந்த ஆண்டு மட்டுமே ரிலையன்ஸ் நிறுவனம் 43 சதவீதம் உயர்த்தி உள்ளது. ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி டிஜிட்டல் மற்றும் சில்லறை வர்த்தகத்தை விரிவுப்படுத்துவதற்காக 20 பில்லியன் டாலரை செலவு செய்துள்ளார்.
தற்போது கூடுதலாக ரிலையன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய கூகிள் மற்றும் பேஸ் பூக் முன்வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஏப்ரல் மாதத்தில், வீழ்ச்சி அடைந்த கச்சா எண்ணெய் தேவையால், தற்போது தான் எண்ணெய் நிறுவனங்கள் மீண்டு வருகின்றனர்..