இலங்கை வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வந்ததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். இதற்கு காரணம் பிரதமர் மற்றும் அதிபர் தான் என்று மக்கள் பதவியை ராஜினாமா செய்யுமாறு போராட்டத்தை தொடங்கின. மேலும் தற்போது வரை இந்த நிலை மாறாமல் இருப்பதால் இலங்கையில் அவசர கால பிரகடனம் அறிவிக்கப்பட்டு தொடர்ந்து நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில் கடந்த மாதம் 21ம் தேதி ராமேஸ்வரம் மீனவர்களை சேர்ந்த 6 பேர் தலைமன்னார், தனுஷ்கோடி இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென வந்த இலங்கை கடற்படையினர் எல்லையை தாண்டி வந்துள்ளதாக அவர்களை கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் கடலுக்குள் யாரும் மீன்பிடிக்க செல்ல மாட்டோம் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 6 மீனவர்களையும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு விடுதலை ஆணை பிறப்பித்தது. மேலும் சில நிபந்தனைகளும் முன் வைத்து பேசியது நீதிமன்றம். விடுதலை செய்யப்பட்ட 6 மீனவர்களும் மீண்டும் எல்லை தாண்டி இலங்கைக்குள் வந்து மீன் பிடித்தால் கிட்டத்தட்ட 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என இலங்கை நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 6 மீனவர்கள் கூடிய விரைவில் தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம் கடற்கரைக்கு வந்து சேர்வார்கள் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்