தற்போதைய காலகட்டத்தில் ஆடைகள் , நிர்வாண மற்றும் ஆபாசம் குறித்த பல சர்ச்சைக்குரிய கருத்துகள் ஏழுந்த வண்ணம் இருக்கிறது. அதாவது பெண்கள் ஆடை அணிவதில் கட்டுப்பாடுகள் மற்றும் பெண்கள் அடக்குமுறை முன்னாடி இருந்து இருக்கிறது. மேலும் நிர்வாணம் எப்போது ஆபாசமாக பார்க்கப்பட்டது என்பதில் பெரும்பாலானோருக்கு பல கருத்துக் கண்ணோட்டம் இருக்கிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்நிலையில் கேரளாவை சேர்ந்த சமூக ஆர்வலர் ரிஹானா பாத்திமா என்பவர் தனது மேலாடையற்ற உடலில், தனது குழந்தைகள் ஓவியம் வரைவதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரிஹானாவின் இந்த செயலை பலரும் எதிர்த்தனர். இந்த செயலால் காவல்துறை அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது.
மேலும் இந்த வழக்கு கேரள நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி வியக்க வைக்கும் தீர்ப்பை வழங்கியுள்ளார், அதாவது, பொதுவாக ஆண்கள் மேலாடை இல்லாமல் திரிந்தால் அது ஆபாசமாக பார்க்கப்படவில்லை. அப்ப பெண்கள் மேலாடை இல்லாமல் திரிந்தால் அது எப்படி ஆபாசமாகும்? . மேலும் ஒரு பெண் தனது உடல் குறித்து சுயமாக முடிவு எடுக்க, அவருக்கு மட்டுமே உரிமை உள்ளதாக கூறி, ரிஹானா மீது தொடரப்பட்ட இவ்வழக்கை தள்ளுபடி செய்தார் நீதிபதி கவுசர்.