பாரதியார் பல்கலைக்கழகத் பதிவாளர் பாஜகவில் இணைந்தார், ஓய்வுபெற்ற அன்றே துணைவேந்தர் அறையில் இருக்கும்போதே இணைந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது செயலுக்கு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
துணைவேந்தர் அறையில் இருந்து பாஜகவில் இணைந்த பதிவாளர்…
கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக இருந்தவர் முருகன். இவர் கடந்த 30ஆம் தேதி பதிவாளர் பதவியில் இருந்து ஒய்வு பெற்றார். இவர் அரசு வேலையில் இருந்து ஒய்வு பெற்ற அதே நாளில் பாஜக கட்சியில் இணைந்தார், இவர் இணைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் முருகன் ஒய்வு பெற்ற அந்நாளில் துணைவேந்தர் அறையில் இருக்கும்போது பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். முருகன் சொந்த முடிவினால் அவருக்கு பாஜக பிடிக்கும் என்பதற்க்காக மட்டுமே இணைந்தார்.
யாருடைய வற்புறுத்தல் மிரட்டலின் பேரில் இணையவில்லை. அவர் துணை வேந்தர் அறையில் இருந்து இணைந்து போது எடுத்துக்கொண்ட போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. ஒரு அரசு அதிகாரியாக இருந்தவர் அதுவும் பல்கலைக்கழ துணை வேந்தர் அறையில் இவர் அரங்கேற்றிய அரசியல் செயலை அந்த அறையில் இருந்து நடத்தியது பெரும் சர்ச்சையாகியுள்ளது, இவவரது செயலருக்கு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். அதுமட்டுமில்லாமல் பல விமர்சனங்கள் பாஜக மீது வந்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்