பெண் ஒருவர் தலையணைக்கு அருகே, செல்போனை வைத்து விட்டு தூங்கும் போது நள்ளிரவில் அந்த போன் வெடித்து சிதறியதால், அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பெண் பரிதாப பலி:
வளர்ந்து வரும் நவீன யுகத்தில், செல்போன் பயன்பாட்டின் அளவு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. குழந்தை முதல் பெரியவர் வரை, அனைவர் கையிலும் மொபைல் தஞ்சம் புகுந்து விட்டது. தற்போது இந்த மொபைலை, இரவு நேரத்தில் பயன்படுத்திவிட்டு அப்படியே தன் தலைக்கு அருகில் வைத்துவிட்டு தூங்குபவர்கள் ஏராளம். இப்படி, மொபைலை பயன்படுத்திவிட்டு பெண் ஒருவர் தலையணைக்கு அருகில் Redmi 6A என்ற உயர்ரக போனை வைத்துவிட்டு தூங்கி உள்ளார்.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
நள்ளிரவில் அந்த போன் திடீரென வெடித்து சிதறியதால், அருகில் உறங்கி கொண்டிருந்த அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்த தகவலை, யூடியூபர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், இனி தலைமாட்டில் இருந்து 10 அடி தூரம் தள்ளி தான் செல்போனை வைக்கணும்டா சாமி என பதிவிட்டு வருகின்றனர்.
Hi @RedmiIndia @manukumarjain@s_anuj Yesterday in Night my Aunty found dead ?, she was using Redmi 6A, she was sleeping & she kept the phone near her face on pillow side & after sometime her phone blast. It's a bad time for us. It's a responsibility of a brand to support? pic.twitter.com/9EAvw3hJdO
— MD Talk YT (Manjeet) (@Mdtalk16) September 9, 2022