ரெட் அலர்ட்!! மாநிலத்தில் அதிகனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

0

உத்தரகாண்ட் மாநிலத்தில் சில பகுதிகளில் தொடர்ந்து தீவிரமாக கனமழை பெய்து வருவதால் ரெட் அலர்ட் போடப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ரெட் அலர்ட் எச்சரிக்கை:

கடந்த சில வாரமாக தென்மேற்கு பருவமழை தொடங்கி எல்லா மாநிலங்களிலும் தொடர்ந்து இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சில பகுதிகளில் கனமழை தீவிரம் அடைந்துள்ளது. இதை தொடர்ந்து மலைப்பகுதிகளில் அதிகமாக மழை பெய்து வருவதால் சில இடங்களில் மலை சரிவு மற்றும் பள்ளத்தாக்கும் ஏற்பட்டுள்ளது. மேலும் ஏரிகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் அப்பகுதியில் வெள்ளம் ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் எந்த வித அசம்பாவிதம் நடக்காமல் இருக்க மீட்பு குழு தயாராக இருக்கும்படி இந்திய வானிலை மையம் வலியுறுத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டுள்ளது. மேலும் குமாவோன் மற்றும் கார்வால் போன்ற இடங்களில் கனமழை வாய்ப்பு இருப்பதாகவும் மக்கள் கவனத்துடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here