மூன்று நாட்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை.. எங்கெங்கு ரெட் அலர்ட் – மக்கள் கடும் அவதி!!

0
மூன்று நாட்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை.. எங்கெங்கு ரெட் அலர்ட் - மக்கள் கடும் அவதி!!

கனமழை தீவிரம் அடைந்துள்ளதால் மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, பால்கர் மற்றும் தானே ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் புனே, ரத்னகிரி, ராய்காட் மற்றும் சதாரா ஆகிய பகுதிகளுக்கு ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

ரெட் அலர்ட்:

கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கி பல மாநிலங்களிலும் தொடர்ந்து இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மேலும் சில மாநிலங்களில் கனமழை தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் மும்பையில் கடந்த இரண்டு நாட்களாக மிதமான மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து இன்று முதல் ஆகஸ்ட் 11 தேதி வரை பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் பால்கர் மற்றும் தானே மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து புனே, ரத்னகிரி, ராய்காட் மற்றும் சதாரா ஆகிய பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. மக்களின் பாதுகாப்பிற்காக தேசிய பேரிடர் மீட்பு படை களமிறங்கியுள்ளது. இது தவிர குஜராத், ஒடிசா, தெலுங்கானா, சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் பல மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here