கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்!!!

0
கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்!!!
கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்!!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். ஆனாலும் இவர்கள் ஆறு மாதங்களுக்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

கொரோனா என்னும் இந்த கொடிய நோயால் மக்கள் பலியாகி வருகின்றனர் இந்த நோய்க்கான சரியான மருந்து எந்த நாடும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. இந்த நோய்க்கான மருந்துகள் தயாரிப்பதில் அனைத்து நாடுகளும் ஆர்வமாக காட்டிவருகின்றனர்.அதுமட்டுமல்லாமல், அனைத்து நாடுகளும் தடுப்பூசிகளை கண்டுபிடித்து வருகின்றனர் அதற்கான பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றது பரிசோதனைகளுக்குப் பின் நாட்டு அரசுடன் சட்டப்பூர்வ சான்றிதழ் ஒப்புதல் வாங்கிய பின்னரே தடுப்பூசி போடப்படுகிறது.தடுப்பூசி மட்டுமே கொரோனா நோய்க்கான சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. இதில் இந்தியாவும் இரண்டு வகையான தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்
தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்

அந்த இரண்டு வகையான தடுப்பூச்சிகளும் ஒப்புதல் வாங்கி மக்களிடம் தடுப்பூசி செலுத்தப்படுகிறது ஆனால் இந்த தடுப்பூசியினால் பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன என்று மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.அதனால் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர சற்று தயங்குகின்றனர். கொரோன நோய்க்கான சரியான மருந்து தடுப்பூசி மட்டும் தான் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.இந்த தடுப்பூசியினால் வரும் விளைவுகளையும் சந்தேகத்தையும் மக்கள் கேட்டு வருகின்றனர் அதற்கும் விளக்கம் அளித்துக் கொண்டு தான் வருகிறது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்.ஆனால் இந்த கொரோனா தொற்றில் இருந்து பலரும் குணமடைந்து வருகின்றனர். நோயிலிருந்து குணமடைந்து வந்தவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டுமா? என்ற கேள்வி எழுப்பியுள்ளனர்.சிலர் அந்த கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் கொடுத்துள்ளது தொற்று பரவி இருந்தாலும் பரவா விட்டாலும் தடுப்பூசிகளை போட்டுக் கொள்வது சிறந்தது அப்பொழுதுதான் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி நோயுடன் போராட முடியும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பிய பின்னரும் மூன்று மதத்திற்கு பின் எட்டு மாதத்திற்குள் தடுப்பூசி போட்டுக் கொள்வது சிறந்தது.எனவே நோயிலிருந்து குணமடைந்து வந்தவிட்டோம் என்று எண்ணாமல் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது இந்த ஊசியை போட்டுக் கொண்டால் எதிர்ப்பு சக்தி வந்துவிடும் என கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here