உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், மூத்த அரசியல்வாதியுமான தா.பாண்டியனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தா.பாண்டியன்:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக கடந்த 2015 வரை பதவி வகித்தவர் மூத்த அரசியல்வாதியான தா.பாண்டியன். அக்கட்சியின் மூத்த தலைவராக விளங்கி வரும் அவருக்கு வயது 88. இவர் கடந்த புதன்கிழமை அன்று உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தமிழக போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் – பொதுமக்கள் அவதி!!
அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வென்டிலேட்டரின் உதவியுடன் சிகிச்சை பெற்று வரும் அவரது உடல்நிலை குறித்து தற்போது கட்சி தொண்டர்கள் பெரிதும் கவலை தெரிவித்து வருகின்றனர். தா.பாண்டியனின் மனைவி ஜாய்ஸ் பாண்டியன் கடந்த 2010ல் உடல் நலக்குறைவு காரணமாக காலமாகிவிட்டார். இவருக்கு இரு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.