விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியலான ராஜா ராணியின் இரண்டாம் பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. அதன் ஹீரோவான சித்துவுக்கு தற்போது புதிதாக சிக்கல் ஒன்று எழுந்துள்ளதை தொடர்ந்து அவரது ரசிகர்கள் அவரிடம் அதுபற்றி கேள்விகளை கேட்டு வருகின்றனர்.
ராஜா ராணி 2:
விஜய் டிவி யில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலுக்கு ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. சஞ்சீவ் மற்றும் ஆல்யா மனசா இணைந்து நடித்த முதல் பாகம் சூப்பர் ஹிட்டடித்ததை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சித்து ஹீரோவாக நடிக்க ஹீரோயினாக ஆல்யா மானசா இதிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
குக் வித் கோமாளியில் அஸ்வினுடன் ஷிவாங்கி செய்த காரியம் – வெறியான பாபா மாஸ்டர்!!
இந்நிலையில் சித்துவின் மேனேஜர் பெயரில் புதியதாக ஒரு போலிக்கணக்கு தற்போது இணையத்தில் உலவுகிறது. பொதுவாக மோசடி நபர்கள் பிரபலமானவர்களின் பெயரிலோ அவர்களை சேர்ந்தவர்களின் பெயரிலோ இவ்வாறு போலிக்கணக்குகள் தொடங்கி மோசடியில் ஈடுபடுவதுண்டு. அதை போலவே இப்போது சித்துவுக்கும் நடந்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்த போலிக்கணக்கை கண்டுபிடித்த சித்துவின் ரசிகர்கள் அவரிடம் இது பற்றி கேள்வி எழுப்ப, அவரும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இது குறித்து பதிவிட்டு “யாருப்பா நீ?? எனக்கே உன்ன பார்க்கணும் போல இருக்கு” என்று ஜாலியாக கலாய்த்துள்ளார். பிரபலமானவர்களின் கணக்குகளை ஹேக் செய்வது, அவர்களின் பெயரில் போலி கணக்கு தொடங்குவது போன்ற மோசடியில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரித்தும் சில விசமிகள் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.