பகல் நிலவு அசீம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வராததற்கு இதான் காரணமாம் – குடும்பத்தில் நடந்த சோகம்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீரியல் நடிகரான அசீம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது வரை அவர் பிக் பாஸ் வீட்டிற்கு வரவும் இல்லை. ஏன் அவர் இன்னும் கலந்துகொள்ள வில்லை என்பதற்கான காரணம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சீரியல் நடிகர் அசீம்

மக்களின் பல எதிர்பார்ப்புகளுக்கு பிறகு ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. 17 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில் கடந்த வாரம் எவிக்ஷனுக்கு பிறகு தற்போது 13 போட்டியாளர்கள் உள்ளனர். முதல் வாரத்தில் ரேகா வெளியேறினார். அதற்கடுத்து வேல்முருகன், சுரேஷ் மற்றும் சம்யுக்தா போன்றோர் வெளியேறினர்.

கூடுதலாக வைல்ட் கார்டு என்ட்ரியும் இருந்தது. அர்ச்சனாவும், சுசித்ராவும் இப்படி வந்தவர்கள் தான். சுசித்ரா சென்ற வாரம் வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் பகல் நிலவு மற்றும் கடைக்குட்டி சிங்கம் சீரியலில் ஷிவானிக்கு ஜோடியாக நடித்த அசீம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியானது. இதனால் அவர் எப்பொழுது வருவார் என பலரும் எதிர்பார்த்திருந்தனர்.

இதற்காக அவர் ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனாலும் ஏன் அவர் இன்னும் கலந்துகொள்ளவில்லை என்பது மக்களின் கேள்வியாக இருந்தது. இந்நிலையில் தற்போது அவர் ஏன் இன்னும் கலந்துகொள்ளவில்லை என்ற காரணம் வைரலாகி வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதாவது அவர் அம்மாவின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இவர் தான் அருகில் இருந்து பார்த்துக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் இவர் தனிமை படுத்தப்பட்ட ஹோட்டலில் இருந்து வெளியேறியுள்ளார். இதனை வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அசீம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here