தமிழ்நாட்டில் 12ம் பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களுக்கு மே மாதம் மறுதேர்வு., பறந்த கோரிக்கை!!!

0
தமிழ்நாட்டில் 12ம் பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களுக்கு மே மாதம் மறுதேர்வு., பறந்த கோரிக்கை!!!
தமிழ்நாட்டில் 12ம் பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களுக்கு மே மாதம் மறுதேர்வு., பறந்த கோரிக்கை!!!

தமிழகத்தில் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் விதத்தில் பல்வேறு வசதிகளை தேர்வுகள் இயக்குனரகம் மேற்கொண்டுள்ளது. ஆனாலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெரும்பாலான மாணவர்கள் தேர்வெழுத வரவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த மாணவர்கள் ஆப்சென்ட் ஆனதிற்கான காரணங்களை கண்டறிந்து இவர்களுக்கு வருகிற ஜூன் மாதம் மறுவாய்ப்பு வழங்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் இந்த தேர்வினை முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என மாணவர் சங்க தலைவர் அரவிந்தசாமி நாமக்கல் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

ஹாக்கி மைதானத்திற்கு இந்திய நட்சத்திரத்தின் பெயர்…, இந்த பெருமையை அடைந்த முதல் வீராங்கனை!!

இதில், “நடப்பு கல்வியாண்டு +2 பொதுத்தேர்வு எழுத 8.75 லட்ச மாணவ மாணவியர்கள் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் முதல் நாள் தமிழ் தேர்விலே 49,559 மாணவர்கள் தேர்வெழுத வரவில்லை. இதில் 40 ஆயிரம் பேர் பிளஸ் 1 தேர்வில் பெயில் ஆனவர்கள் என தெரிய வந்துள்ளது. இவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தேர்வு பயத்தை போக்குவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். மேலும் மறுவாய்ப்பாக வருகிற மே மாதத்திற்குள் மறு தேர்வு வைக்க வேண்டும்.” என குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து இதற்கான அறிவிப்புகளை விரைவில் பள்ளிக்கல்வித்துறை வெளியிடும் என பலரும் எதிர்பார்த்து உள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here