ஐபிஎல் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு RCB அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வழிகள் குறித்து இப்பதிவில் காணலாம்.
RCB:
இந்தியன் பிரீமியர் லீக் தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியானது, தனது 11வது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியை (MI) எதிர்த்து போட்டியிட்டது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த RCB அணி 20 ஓவர் முடிவில் 199 ரன்களை எடுத்திருந்தது. இதையடுத்து களமிறங்கிய, மும்பை இந்தியன்ஸ் அணி சூர்யகுமார் யாதவ் (83), இஷான் கிஷன் (42) மற்றும் நேஹால் வதேரா 52* அதிரடியால் 16.3 ஓவரிலேயே, இலக்கை அடைந்து அபாரமாக வெற்றி பெற்றது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த வெற்றியால், மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி பட்டியலில் 3 வது இடத்திற்கு முன்னேறி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. ஆனால், RCB அணியோ, 10 புள்ளிகளுடன் 8 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால், RCB அணி பிளே ஆப்க்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது.
கே எல் ராகுல் அணிக்கு திரும்புவது எப்போது?? அவரை வெளியிட்ட பதிவு இதோ!!
அதாவது, RCB அணி இன்னும் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக, மே 14, மே 18 மற்றும் மே 21 தேதிகளில் மோத உள்ளது. இந்த 3 போட்டிகளிலும் RCB அணி வென்றால் மட்டுமே பிளே ஆப் வாய்ப்பை பெற கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், RCB அணி பிளே ஆப்புக்கு முன்னேற 43% முதல் 23% வரையிலான வாய்ப்பை உள்ளதாக கருதப்படுகிறது.