IPL தொடருக்கான RCB அணியில் தொடர்ந்து வீரர்களுக்கிடையே காயம் ஏற்பட்டு வருவது அணி வீரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
RCB
IPL தொடர் மார்ச் 31ம் தேதி தொடங்க உள்ள நிலையில் அனைத்து அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டு பட்டத்தை அடைய முடியாத அணிகள் இந்த ஆண்டு எப்படியாவது வெற்றி கோப்பையை ருசிக்க வேண்டும் என போராடி வருகின்றனர். CSK, MI அணி போலவே அதிக ரசிகர்களை கொண்ட RCB அணி கடந்த ஆண்டு பிளே ஆப் வரை சென்று பதட்டத்தை நழுவ விட்டது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மேலும் எவ்வளவு பெரிய அணியாக திகழ்ந்தாலும் இதுவரை ஒரு முறை கூட சேம்பியன் பட்டத்தை வெல்ல முடியவில்லை. இதனால் இந்த ஆண்டு எப்படியாவது பட்டத்தை வெல்ல வேண்டும் என வீரர்கள் அனைவரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்த அணிக்கு துரதிஷ்டவசமாக தொடர்ந்து வீரர்களுக்கு காயம் ஏற்பட்டு வருகிறது. அதாவது ஆரம்பத்தில் ஜோஸ் ஹேசல்வுட், மேக்ஸ்வெல் காயத்தினால் அவதிப்பட்ட நிலையில் போட்டியில் பங்கேற்பது கேள்விக்குறியாக இருந்தது.
தளபதி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.., லியோ படத்தை குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த பிரபல இயக்குனர்!!
இதை தொடர்ந்து தற்போது கடந்த சீசனில் RCB அணிக்காக அதிக ரன்கள் குவித்த ரஜத் பட்டிதாரும் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இதனால் இவரும் போட்டியில் பங்கேற்பது கேள்விக்குறியாகிறது. இப்படி நட்சத்திர வீரர்கள் பலரும் தொடர்ந்து காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் நிலையில் IPL தொடரில் RCB என்ன செய்ய போகிறது என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.