மாநாடு வெற்றிக்கு பின் எஸ்.ஜே.சூர்யாக்கு அடிச்ச லாட்டரி.., இனி உங்க காட்டுல மழை தான்!!

0

பிரமாண்ட இயக்குனர் சங்கர் படைப்பில் உருவாகி வரும் ஆர்.சி.15 திரைப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்து வரும் நிலையில், அவரின் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

எஸ்.ஜே.சூர்யா:

கோலிவுட் சினிமாவில் வித்தியாசமான கதைகளை படைத்து தானே ஹீரோவாக நடித்து வலம் வந்தவர் தான் நடிகர் எஸ்.ஜே.சூர்யா. தற்போது வில்லன் கதாபாத்திரத்தில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். மேலும் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான மாநாடு படத்தில் நகைச்சுவை கலந்த வில்லனாக வந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.

இந்த படத்தில் இருந்து ஹீரோவாக நடிப்பதை நிறுத்தி விட்டு வில்லனாக தோற்றம் அளித்து வருகிறார். அந்த வகையில் திரையுலகத்தை அடுத்த கட்டத்திற்கு இழுத்து சென்ற இயக்குனரான ஷங்கர் படைப்பில் ஆர்.சி.15 திரைப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார். மேலும் ராம்சரண் நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். இந்நிலையில் படத்தில் நடிப்பதற்கு எஸ்.ஜே.சூர்யா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பிரமாண்ட இயக்குனருடன் இரண்டாவது முறையாக கைகோர்த்துள்ளார் நடிகர் எஸ்.ஜே.சூர்யா. அதற்கு முன் நண்பன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் குறுகிய நிமிடத்தில் வந்தாலும் அவருடைய கதாபாத்திரம் கோலிவுட்டில் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் ஆர்.சி.15 திரைப்படத்தில் வில்லனாக நடிப்பதற்கு 7 கோடியை சம்பளமாக வாங்கியுள்ளார். நடிகர் எஸ்.ஜே.சூர்யா கேரியரில் 7 கோடி தான் இவர் வாங்கிய அதிகமான சம்பளம் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here