நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள ரூ.2,000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்தது. இதைத்தொடர்ந்து மே 23ம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை வங்கிகளில் ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள காலக்கெடுவையும் வழங்கியுள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
ஆனால் சில தினங்களாக பெரும்பாலான வங்கிகளில் சில்லறை தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால் வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட பலரும் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் நாளை (ஜூன் 8) இரு மாத நாணயக் கொள்கை கூட்டம் முடிவடைய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதன் முடிவில் ரெப்போ விகிதம், சில்லறை பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை RBI கவர்னர் சக்திகாந்த் தாஸ் அறிவிப்பார்.
மாணவர்களுக்கு குட் நியூஸ்..,,தமிழகத்தில் அரசு மற்றும் அரசு சார்ந்த கல்லூரிகளுக்கு பறந்த உத்தரவு!!
அதுபோல ரூ.2,000 நோட்டு பிரச்சனை குறித்தும், செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பிறகு இதன் நிலை என்ன? உள்ளிட்ட தகவல்கள் குறித்தும் கட்டாயம் அறிவிக்க வாய்ப்புள்ளது. உலகப் பொருளாதாரம் மந்த நிலையில் இருப்பதால் நாட்டில் வட்டி விகிதம் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.