சன் டிவியின் ”அன்பே வா” சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து மகாலஷ்மி கடந்த வருடம் producer ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார். இதை தொடர்ந்து இவரும் தாங்கள் ஜோடியாக எடுத்துக் கொள்ளும் ரொமான்டிக் பிக்குகளை தங்களின் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அந்த வகையில் தற்போது ரவீந்தர் தனது இன்ஸ்டாகிராமில் செய்துள்ள போஸ்ட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தான் தனியாக இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து, அதில் ”கடினமான நேரங்களிலும் சிரிக்க கற்றுக்கொள்ளுங்கள். ஏனென்றால் உங்கள் சோகத்தில் மட்டும் தான் பலர் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
இவரின் இந்த போஸ்டை பார்த்த ரசிகர்கள் என்னாச்சு ரவீந்தருக்கு, ஒருவேளை மகாலட்சுமிக்கும் இவருக்கு இடையில் எதுவும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டதா என கேள்வி எழுப்பி வந்துள்ளனர். இதற்கு பதிலளிக்கும் வகையில் மகாலட்சுமி தனது இன்ஸ்டாவில் இருவரும் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, ” நீ என்னை சுற்றி கைகளை வைக்கும் போது, இந்த உலகில் என்னால் முடியாதது எதுவும் இல்லை என தெரியப்படுத்துகிறாய். உன்னை என் முழுமனதுடன் ஏற்கிறேன் அம்மு” என குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram