இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டி20 தொடரில் இருந்து நட்சத்திர ஆல் ரவுண்டர் ரவீந்தர ஜடேஜா விலகி உள்ளார். நேற்று நடைபெற்ற போட்டியில் மிட்செல் ஸ்டார்க் வீசிய பவுன்சரால் காயம் அடைந்த அவர் பாதியிலேயே வெளியேறிய நிலையில் எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தியா – ஆஸ்திரேலியா:
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணி ஏற்கனவே ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது. இதனால் டி20 தொடரை கைப்பற்றும் முனைப்புடன் வீரர்கள் களமிறங்கி உள்ளனர். தலைநகர் கான்பெர்ரா மைதானத்தில் நடைபெற்ற கடைசி ஒருநாள் & முதல் டி20 என இரு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் அடுத்த 2 டி20 போட்டிகளும் சிட்னியில் நடைபெற உள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஒருநாள் போட்டியின் போது ஏற்பட்ட காயத்தால் ஆஸ்திரேலியா அணியின் அதிரடி ஓப்பனிங் பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் டி20 தொடரில் இருந்து விலகினார். அவர் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதும் சந்தேகமே என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று கடைசி 2 ஓவர்களில் ஆஸ்திரேலியா பவுலர்களை பதம் பார்த்த ஆல் ரவுண்டர் ரவீந்தர ஜடேஜா, மிட்செல் ஸ்டார்க் வீசிய பவுன்சர் ஹெல்மட்டை தாக்கியது. அதுமட்டுமின்றி போட்டியின் நடுவிலேயே தசைப்பிடிப்பால் அவதிப்பட்டார்.
மாணவர்களை கல்லூரிக்கு நேரில் வர நிர்பந்திக்க கூடாது!!
இருப்பினும் கடைசி வரை போராடிய ஜடேஜா 44 ரன்கள் விளாசினார். ஆனால் காயத்தால் அவதிப்பட்ட அவர் போட்டியில் பந்துவீசவில்லை. அவருக்கு பதிலாக களமிறங்கிய சாஹல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்று அசத்தினார். இந்நிலையில் ரவீந்தர ஜடேஜா அடுத்த இரு டி20 போட்டிகளிலும் விளையாட மாட்டார் என அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷர்துல் தாகூர் அவருக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.