சமீப காலமாக சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாக உள்ளது ரவீந்தர் மகாலட்சுமி திருமணம் தான். ஆரம்பத்தில் இவர்கள் திருமணம் பற்றி கருத்து தெரிவித்த ரசிகர்கள் பின்னர் அது அவர்களின் சொந்த வாழ்க்கை என விலகிவிட்டனர். ஆனால் இவர்களை நேரில் அழைத்து பல யூடியூப் சேனல்கள் நேர்காணல் செய்தனர்.
இந்நிலையில் பிரபல சேனலில் நெறியாளரான முக்தர் என்பவர் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமியை நேர்காணல் செய்துள்ளார். அவர் அந்த தம்பதியிடம் பல சர்ச்சைக்குரிய கேள்விகளை கேட்டு வாயடைக்க செய்துள்ளார். அதாவது, காதலுக்கு கண்ணில்லை என்பார்களே அது தான் இந்த திருமணமா, ஒரு ஏழை இவ்வளவு குண்டாக இருந்தால் திருமணம் செய்து கொள்வீர்களா என அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டுள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனால் பேச முடியாமல் மகாலட்சுமி திணற ரவீந்தர் தான் ஏதோ சொல்லி சமாளித்துள்ளார். ரசிகர்கள் பலரும் இந்த நேர்காணலுக்கு, “இது அவர்களின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை.. இதில் ஒருவர் தன் கருத்துக்களை திணிக்க எந்த உரிமையும் இல்லை” என ரவீந்தர் மகாலக்ஷ்மி ஜோடிக்கு ஆதரவாக கமெண்ட் செய்து வருகின்றனர்.