இப்பொழுது சோசியல் மீடியா முழுக்க பேச்சு என்றால் அது ரவீந்தர்-மஹாலக்ஷ்மியின் திருமணம் குறித்து தான். இவர்களின் திருமணம் எப்படி நடந்தது, இதுக்கு முன்னாடி எந்த ஒரு இன்பர்மேசனும் இல்லாமல் இப்படி திடுதிப்புனு கல்யாணம் நடந்துடுச்சே என்றே ரசிகர்கள் பலரும் குழப்பத்தில் உள்ளனர்.
ஏற்கனவே மஹாலக்ஷ்மி பல சர்ச்சையில் சிக்கி இருந்தவர். அதே போல தான் ரவீந்தரும். பிக் பாஸ் ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்தே பேமஸ் ஆனார். இவர்கள் இவரின் காம்போ எப்படி possible என்று பலரும் குழம்பி போயுள்ளனர். இப்படி இருக்க இவர்களின் திருமணம் நவம்பர் மாதம் தான் நடக்க இருந்ததாம்.
ஆனால் மஹாலக்ஷ்மியின் அண்ணன் ஃபாரினில் இருந்து இந்த காலகட்டத்தில் தான் வர முடியுமாம். அதனால் தான் திருமணத்தை வைத்து விட்டார்களாம். மஹாலக்ஷ்மியின் முழு சம்மதத்துடன் தான் இந்த திருமணம் நடைபெற்றதாம். இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.