இந்தியாவோட வீக்னஸ் இது தானா., என்ன ரவி இப்படி ஒப்பான சொல்லிட்டீங்க., சீக்ரெட்டை தெரிந்து கொண்ட சக அணிகள்!!

0
இந்தியாவோட வீக்னஸ் இது தானா., என்ன ரவி இப்படி ஒப்பான சொல்லிட்டீங்க., சீக்ரெட்டை தெரிந்து கொண்ட சக அணிகள்!!

டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பற்றி முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்திய அணி

ICC சார்பில் நடைபெறும் T20 உலக கோப்பை தொடர் 16 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான முதல் போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இந்தியாவின் பலம், பலவீனம் பற்றி கூறியுள்ளார். அதாவது இந்த உலக கோப்பை தொடரில் மற்ற அணிகளை சமாளிப்பதே இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த சூழலில் இந்தியா தற்போது தரமான பேட்டிங் வரிசையில் உள்ளனர். அதன்படி பார்த்தால் விராட், ரோஹித், சூர்யா குமார் போன்ற வீரர்கள் அதிரடியாக விளையாடி வருகின்றனர். ஆனால் இந்தியா தற்போது பவுலிங்கில் தான் மோசமாக விளையாடி வருகிறது. மேலும் முக்கிய பந்து வீச்சாளரான பும்ரா அணியில் இருந்து விலகியுள்ளார்.

ரோஹித்தை டார்கெட் செய்யும் கிரிக்கெட் வட்டாரங்கள்., அப்படி என்னதான் பண்ணீங்க., சரி செய்வாரா கேப்டன்!!

ஆனால் அந்த இடத்திற்கு யார் வரப்போகிறார் என்று தற்போது வரை தெரியவில்லை. எனவே இந்திய அணி பந்து வீச்சை சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதே போன்று ஃபீல்டிங்கிலும் இந்திய அணி கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். இந்த குறைகளை சரி செய்தால் மட்டுமே இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்த முடியும் என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here