புதிய T20 இந்திய அணியில் இந்த 3 வீரர்களுக்கு கட்டாயம் இடம்?? ரவி சாஸ்திரி ஓபன் டாக்!!

0
புதிய T20 இந்திய அணியில் இந்த 3 வீரர்களுக்கு கட்டாயம் இடம்?? ரவி சாஸ்திரி ஓபன் டாக்!!
புதிய T20 இந்திய அணியில் இந்த 3 வீரர்களுக்கு கட்டாயம் இடம்?? ரவி சாஸ்திரி ஓபன் டாக்!!

இந்தியாவில் ஐபிஎல் தொடரின் 16 வது சீசன், அரங்கம் நிறைந்த ரசிகர்கள் மத்தியில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூலம் சர்வதேச இந்திய புதிய டி20 அணியை உருவாக்குவதில் பிசிசிஐ கட்டாயமாக தீவிரம் காட்ட கூடும். ஒவ்வொரு வீரருக்கும் சர்வதேச இந்திய அணியில் இடம் பிடிப்பது என்பது பெரிய கனவாகவே உள்ளது. இதனால், இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் தொடர்களில் இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி அந்த கனவே அடைந்து வருகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த வகையில் தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரின் மூலம், 3 வீரர்கள் சர்வதேச இந்திய அணியில் இடம் பிடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். அதாவது, ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ரிங்கு சிங் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் திலக் வர்மா ஆகியோரை குறிப்பிட்டுள்ளார்.

கல்யாணம் முடிச்ச கையோட youtuber இர்பான் எங்க போயிருக்காரு தெரியுமா? வைரலாகும் பதிவு!!

மேலும், நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸின் ஜிதேஷ் ஷர்மா, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் வேகப்பந்து வீச்சாளர் மொஹ்சின் கான், குஜராத் டைட்டன்ஸின் சாய் சுதர்சன் உள்ளிட்டோரும் தங்களது அற்புதமான திறமையை வெளிப்படுத்தி, பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தி வருகின்றனர். இவர்கள், அனைவரும் இந்திய அணியில் இடம் பிடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here