சீரியல் நடிகை மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரவீந்தருக்கு, வாழ்க்கையில் இதுவரை கிடைக்காத மிகப்பெரிய வாய்ப்பு அமைந்து, அதில் வெற்றியும் கிடைத்துள்ளது.
ரவீந்தர் பதிவு :
கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி, காதலித்து திருமணம் செய்து கொண்ட ரவீந்தர் மகாலட்சுமி தம்பதியின், தற்போதைய செய்திகள் தான் இணையத்தில் ஹாட் டாபிக்காக சென்று கொண்டிருக்கிறது. செல்லும் இடங்களில் எல்லாம் வளைத்து வளைத்து எடுக்கும் புகைப்படங்களை பதிவிடும் இந்த தம்பதி, அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான வந்தால் மகாலட்சுமியே என்ற சிறப்பு நிகழ்ச்சிக்கு சென்றனர்.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
அங்கு இவர்கள் காதல், திருமணம் குறித்த சிறப்பு நேர்காணல் நடத்தப்பட்டது. இந்த நிலையில், ரவீந்தர் தனது insta பக்கத்தில் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது கலைமாமணி ஞானசம்பந்தன் ஐயா பட்டிமன்றத்தில் வாழ்வில் முதல் முறையாக பேச்சாளராக பங்கேற்றேன். அதில் என் அணிக்கு வெற்றி கிடைத்துள்ளது.
இந்த மகிழ்ச்சியான தருணத்தை, என் மனைவி மற்றும் தாய்க்கு சமர்ப்பிக்கிறேன். அவர்கள் இல்லாமல் இது இல்லை, என உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், எல்லாம் மகாலட்சுமி வந்த நேரம், உங்க வாழ்க்கை இன்னும் சூப்பரா போகணும்னு வேண்டுகிறோம் என கூறி, அவருக்கு வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.
View this post on Instagram