காலை உணவு எப்பொழுதுமே இட்லி, தோசை என்று பலருக்கும் வெறுப்பாகி இருக்கும். இப்பொழுது ரவையை வைத்து சூப்பரான காலை உணவு அதுவும் எளிய முறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வெங்காயம் – 1
மிளகாய்த்தூள் – 1/2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி
கடலை மாவு – 2
ரவை – 1 கப்
அரிசி மாவு -1 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், சீரகம் சேர்த்து வதக்கவும். பின்பு மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கி அதனுடன் கடலை மாவு,அரிசி மாவு சேர்த்து வதக்கி தனியாக எடுத்துக்கொள்ளவும்.
அதன் பின் மற்றொரு கடாயில் தண்ணீர் ஊற்றி உப்பு சீரகம் சேர்த்து கொதிக்க விட்டு வறுத்த ரவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டியாகாமல் கிளறவும். நன்கு அடிபிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
இப்பொழுது அதனை தனியாக எடுத்து உருண்டையாக்கி அதனை தட்டையாக தட்டி அதனுள் அந்த மசாலாவை சேர்த்து மூடி அதனை தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி வறுத்து எடுக்கவும். இப்பொழுது சுவையான ரவா மசாலா இட்லி தயார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்