16 வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆனது தமிழகத்தில் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. ஆளுநர் அவர்களின் உரையில், புதிய ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பிக்கும் அனைவருக்கும் 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் என்று தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் புதிய ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தொடங்கும் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இதுவாகும். இந்த கூட்டத்தொடர் ஆனது தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களின் உரையுடன் தொடங்கப்பட்டது. இதில் தமிழகத்தின் பல்வேறு முக்கியபிரச்சனைகள், தீர்மானங்கள், கொரோனா பற்றிய தடுப்பு நடவடிக்கைகள், வழிமுறைகள் இது போன்ற பல நிகழ்வுகளுக்கான அலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசு அறிவித்த கொரோனா நிவாரணம் பெரும்பாலானவை ரேஷன் கடைகள் மூலம், ஒவ்வொரு ரேஷன் அட்டைதார்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வேறு சில அத்தியாவசிய பணிகளுக்காகவும் ரேஷன் கார்டுகள் தேவைப்படுகிறது. இதற்காக பல்வேறு தரப்பு மக்களும் ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பித்து வருகின்றனர்.
அதன் அடிப்படையில், புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கும் அனைவருக்கும் 15 நாட்களில் அதற்கான ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் என்று ஆளுநர் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அவரின் உரையில் கூறியுள்ளார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களின் இந்த அறிவிப்பானது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்