ரேஷன் கடைகள் கூடுதலாக 5மணி வரை இயங்கும் – தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!!!

0

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், நாளை முதல் நியாயவிலைக் கடைகள் 5மணி வரை இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!

தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு:

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி ஜூன் 7 வரை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்தி இருந்தது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று தமிழக அரசு புது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது நாளை முதல் நியாயவிலைக் கடைகள் காலை 9 மணி முதல்- 12.30 மணி வரையிலும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் செயல்படும் என உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. இந்த வேலை நேரம் மறு உத்தரவு வரும் வரை நடைமுறையில் இருக்கும் என்று அறிவித்தது.

அத்துடன் கொரோனா நிவாரண நிதி இரண்டாம் தவணை ரூ.2000 மற்றும் 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய பொருள் தொகுப்பினை மக்கள் ஜூன் 15ம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம் என்றும், டோக்கன்களை பிற்பகலில் ஜூன் 11 முதல் ஜூன் 14 வரை வீடுகளுக்கு சென்று வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here