இனி அனைத்து ரேசன் கடைகளில் புகார் பதிவேடு வைக்க வேண்டும் – தமிழக அரசு உத்தரவு!!

0
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக் நியூஸ் - முக்கிய உணவு பொருள் விநியோகம் கட்! அரசு பகீர்!!
தமிழக ரேஷன் கார்டுதாரர்களே உஷார் - இன்னும் 2 நாள் மட்டும் தான் இருக்கு! இப்பவே ரெடி ஆகிகோங்க!!
தமிழ் நாட்டில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளிலும், அந்தந்த ரேஷன் கடைகள் மீதான புகார்களை மக்கள் தெரிவிக்கும் விதமாக புகார் பதிவேடு வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மாநில அரசு பொதுமக்களுக்கு வழங்கும் பெரும்பாலான நலத்திட்டங்கள் ரேஷன் கடைகள் மூலமாகேவே பொதுமக்களை சென்று அடைக்கின்றன. மேலும் அத்தியாவசிய பொருட்கள் மானிய விலையிலும், இலவசமாகவும் ரேஷன் கடைகள் மூலம்  மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் நியாய விலை கடை ஊழியர்கள் குளறுபடிகள் செய்வதாக புகார் எழுகின்றன.
தற்போது மக்கள் ரேஷன் கடைகளின் மீதான புகார்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கலாம். ஆனால் அதில் சில சிக்கல்கள் மக்களுக்கு இருப்பதால் மக்களின் சிரமத்தை குறைக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அது என்னவென்றால் நியாயவிலைக் கடைகளிலேயே புகார் பதிவேடு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த புகார் பதிவேடு முறையில் அளிக்கப்படும் புகாரை பதிவு செய்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஆன்லைனில் புகாரளிக்கும் முறையுடன், புகார் பதிவேடு முறையும் நடைமுறையில் இருக்கும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here