குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு – இனி இவர்களுக்கெல்லாம் ரேஷன் பொருட்கள் கட்! மாநில அரசு அதிரடி!!

0

ரேஷன் பொருட்களை, தகுதி இல்லாத நபர்கள் பெறுவதைத் தடுப்பதற்காக உத்தரபிரதேச அரசு, அதிரடி திட்டம் ஒன்றை செயல்படுத்தியுள்ளது. விரைவில், இந்த திட்டம் தமிழகத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 புது பிளான்:

நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக, உணவு பொருள் வழங்கல் துறையின் கீழ் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம், ரேஷன் கார்டை வைத்து எந்த மாநிலத்திலும் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

ரேஷன் அட்டை தாரர்களுக்கு இனி 1 கிலோ நெய் - பொதுமக்கள் மகிழ்ச்சி!!

இந்த நிலையில், ஒரு சிலர் ரேஷன் பொருட்களை வாங்கி பயன்படுத்தாமல் கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருவதாகவும், பலர் ரேஷன் பொருட்களை வாங்குவது இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், தகுதியான நபர்களுக்கு மட்டும் ரேஷன் பொருட்களை கிடைக்கச் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

அதாவது, ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் பல நாட்களாக பொருட்கள் வாங்காமல் இருந்தால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என்றும், இதன் மூலம் உணவுக்காக கஷ்டப்படும் சாமானிய மக்களுக்கு கூடுதல் பொருட்களை வழங்கலாம் என்றும் அரசு திட்டமிட்டுள்ளது. இந்த விதிமுறைகள், உத்தரபிரதேச மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட நிலையில், கூடிய விரைவில் தமிழகத்தில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here