மத்திய அரசின் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் வாயிலாக, பயன் அடைந்து வரும் பயனாளர்களுக்கு கோதுமை வழங்குவது நிறுத்தப்பட்டு, 5 கிலோ அரிசி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு முடிவு :
நாடு முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக, சாமானிய மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கரிப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் பயனடையும் பயனாளிகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டம் மூலம் ஜூன் 19 முதல் 30 வரை, உத்திரபிரதேசத்தில் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்தத் திட்டத்தில் சிறிய மாற்றமாக கோதுமைக்கு பதிலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. உத்தரப் பிரதேசத்தில் இந்த முறையை பின்பற்றி, பல மாநில அரசுகளும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த, முடிவு செய்துள்ளனர்.
இதுவரை பயனர்களுக்கு, இலவச திட்டத்தின் கீழ் 3 மற்றும் 2 கிலோ கோதுமை வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த அறிவிப்பை அடுத்து, கோதுமைக்கு பதில் இனி அரிசியே வழங்கப்படும் என தெரிகிறது. கோதுமைக்கான தட்டுப்பாடு நிலவி வருவதால், அரசு இந்த முடிவை மேற்கொண்டு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அறிவிப்பு முழுக்க முழுக்க கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் பயனாளிகளுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்