தமிழகத்தில் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர், எடையாளர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு மாவட்ட வாரியாக நேர்காணல் முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 4 லட்சத்திற்கும் மேலானோருக்கு ஜனவரியில் ரிசல்ட் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில் ஏற்கனவே ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இப்படியாக பதவி உயர்வு வழங்கியது போக எஞ்சியுள்ள காலியிடங்களை நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கான நடவடிக்கைகளை கூட்டுறவு துறை மும்முரமாக மேற்கொண்டு வரும் நிலையில், நேர்காணல் தேர்வில் கலந்து கொண்ட தேர்வர்கள் பலரும் எப்போது முடிவுகள் வெளியிடப்படும்? என கேள்விகளை முன் வைத்து வருகின்றனர். இது தொடர்பான பதில்களை கூட்டுறவுத்துறை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.