ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ் – அடுத்த 3 மாதத்திற்கு கூடுதல் அரிசி விநியோகம்! அரசு அதிரடி!!

0
ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ் - அடுத்த 3 மாதத்திற்கு கூடுதல் அரிசி விநியோகம்! அரசு அதிரடி!!

நாடு முழுவதும் கரீப் கல்யாண் குடும்ப அட்டைதாரர்களுக்கு, வழங்கப்பட்டு வந்த இலவச ரேஷன் அரிசி திட்டத்தை மேலும் 3 மாதத்திற்கு நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

அரசு அறிவிப்பு :

குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் பொருட்கள் மூலம், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பல மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த கொரோனா காலகட்டத்தில் மத்திய அரசு கரீப் கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டத்தை துவக்கியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த திட்டத்தின் மூலம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, கூடுதல் ரேஷன் அரிசி வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டம், கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. வருகிற செப்.30-ஆம் தேதியுடன், இந்த திட்டம் முடிவுக்கு வர இருந்தது.

தமிழக வியாபாரிகளுக்கு ஜாக்பாட் – இதுவரை இல்லாத புதிய திட்டம் அறிமுகம்! அமைச்சர் உறுதி!!

தற்போது, இந்த திட்டத்தை இன்னும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பதாக, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், அடுத்த 3 மாதங்களுக்கு, கரீப் கல்யாண் திட்டத்தின் வாயிலாக கூடுதல் ரேஷன் அரிசி விநியோகம் செய்யப்பட உள்ளது. இதனால் பயனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here