இந்திய அளவில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பொது விநியோக திட்டம் 2024 முதல் அமலுக்கு வரவுள்ளது. இந்த பொது விநியோக திட்டத்திற்கு என தனித்துறை அமைக்கும் படி ரேஷன் கடை பணியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
மேலும் பொருட்களை பொட்டலங்களாக வழங்குதல், ஒரு பொருளுக்கு 2 முறை பில் போடுதல், விற்பனை மையங்களில் 4 ஜி இணையதள வசதி வழங்க வேண்டும், அனைத்து நோய்களுக்கும் எல்லா மருத்துவ மனைகளிலும் சிகிச்சை பெறும் காப்பீட்டு திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறைக்கு ரோந்து பணிக்காக ஆட்டோ வசதி.., அமலுக்கு வரும் புதிய திட்டம்!!
இதோடு fbs ஆய்வு செயலி முறையை ரத்து செய்ய வேண்டும் போன்ற 21 கோரிக்கைகளை ரேஷன் கடை பணியாளர்கள் அரசாங்கத்திற்கு முன் வைத்துள்ளனர். இந்நிலையில் சென்னை பதிவாளர் அலுவலகம் முன்னிலையில் வரும் ஜூன் 9ஆம் தேதி போராட்டம் செய்யவுள்ளனர். அதன் பின்னரும் கோரிக்கைகள் ஏற்காத பட்சத்தில் ஜூன் 14 ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்பட உள்ளதாக சங்க மாநில பொது செயலாளர் கூறியுள்ளார்.