ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் வரும் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
விஜய் டிவியில் மீண்டும் விட்ட இடத்தை பிடித்த பிரியங்கா.. பாவம் மா.கா.பா பலியாயிட்டாரே!
அரசு அறிவிப்பு:
நாடு முழுவதும் ரேஷன் அட்டைகள் மூலம், மானிய விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு மட்டும் இல்லாமல், அரசின் சலுகைகளை பெறுவதற்கு, முக்கிய ஆவணமாகவும் ரேஷன் கார்டு உள்ளது. இந்த நிலையில் ரேஷன் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பது அவசியம், என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. அதற்கான காலக்கெடு, மார்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்தது. இந்த நிலையில், அதற்கான காலக்கெடுவை ஜூன் 30 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கார்டை ஆதார் அட்டையுடன் இணைக்கா விட்டால், அரசு வழங்கும் பல நலத்திட்டங்களை குடும்ப அட்டைதாரர்கள் பெற முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான, ஆன்லைன் வழிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது.
முதலில் uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு செல்ல வேண்டும். பின், start now என்பதை கிளிக் செய்து, அதில் கேட்கப்பட்டுள்ள முகவரி, மாவட்டம், மாநிலம் ஆகியவற்றை நிரப்ப வேண்டும். அதன்பிறகு “ரேஷன் கார்டு பெனிபிட்” என்பதை கிளிக் செய்து, அங்கு கேட்கப்பட்டுள்ள ஆதார் அட்டை எண், ரேஷன் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை உள்ளிட வேண்டும். பின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அந்த எண்ணை நிரப்பிய பிறகு, Succesful என்று திரையில் தோன்றும். இதன்பிறகு செயல்முறை அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின் ரேஷன் கார்டுடன் ஆதார் எண் இணைக்கப்படும்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்