ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி வந்துள்ளது. அதாவது நாட்டில்10 லட்சம் பேருக்கு இலவச ரேஷன் வசதி விரைவில் ரத்து செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச ரேஷன் ரத்து:
ரேஷன் கார்டு வாயிலாக பொதுமக்களுக்கு மலிவு விலையிலும், இலவசமாகவும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது நாடு முழுவதும் 80 கோடிக்கும் அதிகமானோர் இலவச ரேஷன் கார்டை பயன்படுத்தி வருகின்றனர்.
வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்., நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு உடனடி அழைப்பு! பயனர்கள் ஷாக்!!
ரேஷன் பொருட்கள் மட்டுமல்லாது, அரசின் நலத்திட்ட உதவிகளை பெறவும் இந்த ரேஷன் கார்டு அவசியமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில் நாட்டில் சுமார் 10 லட்சம் பேருக்கு இலவச ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது நாட்டில் வசதி படைத்தவர்களும் இலவச ரேஷன் பொருட்களை வாங்கி கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதை மையமாக கொண்டு தற்போது 10 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் கண்டறியப்பட்டு உள்ளதாகவும், அவற்றை விரைவில் ரத்து செய்ய போவதாகவும் அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து இலவச ரேஷன் பெற தகுதியில்லாத பெயர்களின் பட்டியல் டீலருக்கு அனுப்பப்படும். இதன் வாயிலாக போலி ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச உணவு பொருட்கள் வழங்குவது ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.