தமிழகத்தில் வறுமை கோடு கீழ் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை மிக குறைந்த விலையில் மத்திய அரசு ரேஷன் கடை மூலமாக கொடுத்து வருகிறது. இதன் மூலம் தான் மத்திய மற்றும் மாநில அரசு மக்களுக்காக வழங்கப்படும் சலுகைகள் மற்றும் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அந்த வகையில் தமிழகத்தில் சமீப காலமாக செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த விஷயம் தான் சர்ச்சையாக மாறியிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இந்த செறிவூட்டப்பட்ட அரிசி உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கிறது என்று பலரின் கருத்தாக இருந்து வருகிறது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் செறிவூட்டப்பட்ட அரிசியை சோதனை ஓட்டமாக தான் விநியோகிக்கப்படுகிறது. இது தொடர்பாக எந்த ஒரு ஆய்வறிக்கைகளும் மத்திய அரசு சார்பாக தரவில்லை. மேலும் இந்த அரிசியால் ரத்த சோகை நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க கூடாது என்பதால், அவர்களுக்கு சாதாரண அரிசி வழங்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஐபிஎல் 2023 முடிஞ்சு 2 நாள் தா ஆகுது…, அதுக்குள்ள அடுத்த லீக்கா?? வெளியான மாஸ் அப்டேட்!!
எனவே மக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தங்களது கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர்.