ரேஷன் அட்டைதாரர்கள், தங்கள் ஸ்மார்ட் கார்டில் ஏதேனும் திருத்தங்களை செய்ய விரும்பினால், இந்த மாவட்டத்தில் டிசம்பர் 3 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடக்கும் இந்த முகாமை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முக்கிய அறிவிப்பு :
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டுதாரர்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் பொருட்களை பெறுவதற்கு மட்டுமல்லாமல், அரசின் அனைத்து திட்டங்களையும் பெறுவதற்கும் ரேஷன் கார்டு முக்கியமானதாக திகழ்கிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த ரேஷன் கார்டில் ஏதேனும் மாற்றங்களை செய்ய விரும்பினால், இதற்கான சிறப்பு முகாம் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்படும். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில், குடும்ப அட்டைதாரர்களுக்கான சரிபார்ப்பு முகாம் டிசம்பர் 3 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாளான டிச.26 ம் தேதி பொது விடுமுறை., முதல்வர் அறிவிப்பு!!
ஏற்கனவே மாவட்டத்தில் பலர், அந்தியோதயா மற்றும் முன்னுரிமை குடும்ப அட்டைகளாக தங்கள் கார்டுகளை மாற்ற கோரி விண்ணப்பித்தனர். இவர்கள் அனைவரும் இந்த முகாமை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.