வெள்ளை நிற சேலையில் கொள்ளை அழகுடன் ராஷ்மிகா – ட்ரெண்டாகும் புகைப்படங்கள்!!

0

தெலுங்கு படங்களின் மூலமாக தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் தான், நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு தற்போது லைக்குகள் அள்ளுகிறது.

தெலுங்கு நடிகை ரஷ்மிகா மந்தனா

திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்து விட்டு தமிழில் கடுமையாக உழைத்து நடித்தால் தான் தமிழ் ரசிகர்களை கவர முடியும். ஆனால், அப்படி எதுவுமே அல்லாமல் ஒரே ஒரு பாட்டின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவர் முதன்முதலாக கன்னட திரைப்படமான “கர்நாடகா கிரஷ்” என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். அதன் பிறகு தொடர்ச்சியாக அவர் கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் கவனம் செலுத்தி நடித்து வந்தார். பின், இவர் தெலுங்கு நடிகர் விஜய்தேவர்க்கொண்டவுடன் “கீத கோவிந்தம்” என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இவரது திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான திரைப்படமாக இது பார்க்கப்படுகின்றது. காரணம், இந்த திரைப்படத்தில் உள்ள ‘இன்கேம் இன்கேம் காவாலே’ பாடல் மிகவும் பிரபலமாகியது. அந்த பாடலில் இவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது என்று கூட கூறலாம். ஒரே ஒரு பாட்டில் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.

இதனை அடுத்து இவரது படங்கள் அனைத்தும் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. தற்போது ராஷ்மிகா மந்தனா தமிழில் முதன் முறையாக நடிகர் கார்த்தியுடன் “சுல்தான்” திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இவர் தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் ஒரு முக்கியமான நடிகை ஆவார்.

தீப்பெட்டி கணேசனை தொடர்ந்து “காதல்” பட நடிகர் மரணம் – திரைத்துறையினர் அதிர்ச்சி!!

இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நிச்சயமானது. தற்போது ராஷ்மிகா மந்தனா ஒரு நிகழ்ச்சிக்காக சென்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here