பிரபல தெலுங்கு முன்னணி நடிகையாக வலம் ராஷி கண்ணா தற்போது தன்னுடைய நீண்ட நாள் ஆசை ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார். அந்த செய்தி இணையத்தில் உலா வருகிறது.
ராஷி கண்ணா
தொடர்ந்து தனது விடா முயற்சியால் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் ராஷி கண்ணா. தெலுங்கில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து அதன் நாயகியாக உருவெடுத்தவர். தமிழில் இவரின் முதல் திரைப்படமே அதர்வாவுடன் இமைக்க நொடிகள் தான்.
சைடு கதாபாத்திரம் என்று இருக்காமல் இவருக்கும் முக்கியத்துவமான கதாபாத்திரம் அளிக்கபட்டது. இப்பொழுது தமிலேயே பல படங்களில் நடித்து வருகிறார். துக்ளக் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அந்த திரைப்படம் தான் சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது. மேலும் கார்த்தி உடன் சர்தார் என்ற படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் இரண்டு படங்களும் மலையாளத்தில் 1 படமும் நடித்து வருகிறார்.
இப்படி ஒரு பிஸியான நடிகையாக சினிமா துறையில் திகழ்ந்து வருகிறார். ஆனால் எத்தனை படங்களில் நடித்தாலும் தனது விஜய் உடன் இணைந்து நடிப்பது தான் லட்சியமே என்று கூறியுள்ளார். அது தன்னுடைய நீண்ட நாள் கனவு என்று கூறியுள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்