“800” படத்தில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகிக்கொள்வதாக கூறிய பிறகும், அவரது மகளுக்கு ட்விட்டரில் ஒருவர் பாலியல் மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
“800” திரைப்படம்:
முன்னாள் இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கையினை “800” என்ற பெயரில் திரைப்படமாக இயக்க திட்டமிடப்பட்டது. இதில் முத்தையா கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமானார். இதனால் அவருக்கு பெரிதும் எதிர்ப்புகள் கிளம்பியது. திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என்று அனைவரும் தங்களது கண்டனங்களை அவருக்கு தொடர்ச்சியாக தெரிவித்து வந்தனர்.
உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!
இதனால் முத்தையா முரளிதரன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். அதில் நடிகர் விஜய் சேதுபதி இந்த திரைப்படத்தில் நடிக்க வேண்டாம் என்ற கோரிக்கையினை முன்வைத்திருந்தார். இதனை ஏற்ற விஜய் சேதுபதி “நன்றி..வணக்கம்” என்று முத்தையாவின் அறிக்கையுடன் சேர்த்து பதிவிட்டிருந்தார்.
ட்விட்டரில் மிரட்டல்:
அதே போல் நேற்று முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவிற்கு இரங்கலை தெரிவிக்க வந்த போது தான் அந்த படத்தில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்தார். ஆனால், இந்த படத்திற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்பிய வண்ணம் உள்ளது. ட்விட்டரில் ஒருவர் நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்துள்ளார். இது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கூடுதலாக, பலரும் தங்களது கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
குடியுரிமை திருத்த சட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் – பா.ஜ தேசிய தலைவர்!!
பாடகி சின்மயி, திமுக எம்.பி செந்தில் குமார் போன்றோர் தங்களது வலுவான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். ரித்திக் என்று பெயர் கொண்ட அந்த நபர் தான் இப்படியான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே ட்விட்டரில் பலருக்கும் இது போன்ற பாலியல் மிரட்டல் விடுத்தவர் என்று கூறப்படுகிறது. தற்போது அவரது ட்வீட் நீக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் இதே போல் கிரிக்கெட் வீரர் தோனி சரியாக விளையாடாததால் அவரது 5 வயது மகளுக்கும் பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.