ரஞ்சி டிராபியின் காலிறுதி போட்டியில், பஞ்சாப் அணிக்கு எதிராக சௌராஷ்டிரா அணியின் பார்த் புட் 9 வது விக்கெட்டுக்கு சதம் அடித்து அசத்தியுள்ளார்.
ரஞ்சி டிராபி:
இந்தியாவின் உள்ளூர் போட்டிகளில் ஒன்றான ரஞ்சி டிராபி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ரஞ்சி டிராபியில், தமிழ் நாடு, மும்பை, கோவா உள்ளிட்ட 38 அணிகள் மோதிய நிலையில், 8 அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். தற்போது, இந்த காலிறுதி சுற்றுகளில் 4 அணிகள் மற்ற 4 அணிகளை எதிர்த்து போட்டியிட்டு வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த வகையில், சௌராஷ்டிரா அணியானது, பஞ்சாப் அணியை எதிர்த்து போட்டியிட இருக்கிறது. இதில், டாஸ் வென்ற சௌராஷ்டிரா அணி பேட்டிங்கை தேர்வு செய்திருந்தது. இதையடுத்து களமிறங்கிய, சௌராஷ்டிரா அணி 147 ரன்களிலேயே 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன் பிறகு, அதிரடி காட்ட தொடங்கிய சௌராஷ்டிரா அணியின் பார்த் புட் 111* ரன்கள் அடித்து அசத்தினார்.
ஐசிசியின் மூன்று வடிவ தொடரில் சாதனை படைத்த இந்தியா…, அசைக்க முடியாத இடத்தை பிடித்து அசத்தல்!!
இவரது இந்த அதிரடி ஆட்டத்தால், சௌராஷ்டிரா அணியானது 9 வது விக்கெட்டுக்கு 208 ரன்கள் குவித்திருந்தது. இறுதியில், சௌராஷ்டிரா அணியானது 303 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தற்போது பஞ்சாப் அணியானது, தனது முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.