இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களான MS தோனி, சச்சின் டெண்டுல்கர், கபில் தேவ் ஆகியோரது சுயசரிதை திரைப்படங்களாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்புகளைப் பெற்றிருந்தது. குறிப்பாக, தோனியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘MS தோனி: தி அன்டோல்டு ஸ்டோரி’ திரைப்படம் பலராலும் ரசிக்கப்பட்டது.
இந்த திரைப்படத்தில், மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புட் தோனி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படி இருக்க, கிரிக்கெட் உலகின் மற்றுமொரு ஜாம்பவான் ஆன சவுரவ் கங்குலி அவர்களின் வாழ்க்கை படமாக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாகவும், BCCI அமைப்பின் தலைவராகவும் பொறுப்பில் இருந்தவர்.
அஞ்சலியின் 50 ஆவது திரைப்படம் ‘ஈகை’…..,ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்….,
இப்போது, திரைப்படமாகும் கங்குலியின் வாழ்க்கையை லவ் ரஞ்சன் என்ற பாலிவுட் தயாரிப்பாளர் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. மேலும், இந்த படத்தில் ரன்பீர் கபூர் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டால், இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.