பாகுபலி படத்தில் வில்லனாக நடித்த ராணா டகுபதி, தற்போது பூதாகரமாக வெடித்துள்ள போதை பொருள் வழக்கில் விசாரணைக்காக ஐதராபாத் அமலாக்க துறை அதிகாரிகள் முன்பு நேரில் ஆஜராகி உள்ளார்.
திரை துறையில் அடுத்தடுத்து பல முக்கிய பிரபலங்களின் பெயர்கள் போதைப்பொருள் வழக்கில் அடிபட்ட வண்ணம் உள்ளது. சமீபத்தில் கூட பிரபல தமிழ் நடிகை ரகுல் பிரித் சிங்கிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். குறிப்பாக இந்த விசாரணை இயக்குனர் பூரி ஜெகநாத், நடிகைகள் சார்மி கவுர், ரகுல் ப்ரீத் சிங், நவ்தீப், ரவிதேஜா ஆகியோரை வைத்து நடந்து வந்தது
இந்நிலையில் டோலிவுட் நடிகர் ராணா டகுபதியிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது . இவர் பாகுபலி, ஆரம்பம் போன்ற படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பரிச்சியமானவர். இன்று காலை 10 மணியளவில் அவர் அமலாக்கத்துறையினர் முன்பு ஆஜராகினார். மாலை 6 மணி வரை அவரிடம் விசாரணை நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட மொபைல் நம்பர்கள் போதை மருந்து விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட குற்றவாளி கெல்வின் என்பவரிடம் இருந்து பெறப்பட்டது. எனவே தற்போது இவர்களுக்கு எல்லாம் போதை மருந்து சப்ளை நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.