விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரம்யா பாண்டியன் தற்போது அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை கேட்ட அவரது ரசிகர்கள் பலரும் துடித்துப்போய் உள்ளனர்.
ரம்யா பாண்டியன்
ஜோக்கர் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் ரம்யா பாண்டியன். அதன் பிறகு ஆண் தேவதை என்ற படத்தில் சமுத்திரக்கனியுடன் இணைந்து நடித்தார். அந்த படமும் அவருக்கு கைகொடுக்காததால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனால் பலரின் நெஞ்சங்களை கொள்ளைக்கொண்டார். உங்களுக்கு கோவமே வராதா? என பலர் கேட்டும் சிரித்துக்கொண்டு தான் இருப்பார். எல்லா கோமாளிகளுக்கும் பக்குவமாக சொல்லி கொடுத்து பொறுமைசாலி என்றே பெயர் வாங்கினார் ரம்யா.
இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிக் பாஸில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் அமைதியாக இருந்தாலும் நாளடைவில் விஷ பாட்டில் என்று பெயர் வாங்கினார். ஆனாலும் பிக் பாஸ் வீட்டில் 100 நாட்களுக்கு மேல் தாக்கு பிடித்தார்.
தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு பின்பு பாஜக மலர்ந்துள்ளது – எல்.முருகன் பெருமிதம்!!
சிங்கப்பெண் என்றும் பெயர் வாங்கினார். வீட்டை விட்டு வந்த அவருக்கு ஏக வரவேற்பு கிடைத்தது. இப்பொழுது பல படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார். மேலும் பல போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை கைவசம் வைத்துள்ளார். ரம்மு ரம்மு என்று பலரும் உருகி தான் வருகின்றனர்.
இந்நிலையில் அவரது கண்ணிற்கு லேசர் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விஷயத்தை கேட்ட பலரும் ஷாக்கில் உள்ளனர். ரம்யா குணமாகி வர வேண்டும் என்றும் வேண்டி வருகின்றனர்.