தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான ரம்பா, தனது குடும்பத்துடன் சென்னை வந்துள்ளார். இந்த நிலையில், தனது குடும்பத்துடன் சென்று கடற்கரையில் குத்தாட்டம் போடும் வீடியோ வைரலாகியுள்ளது.
வைரல் வீடியோ:
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக திகழ்ந்து வந்தவர் நடிகை ரம்பா. தெலுங்கு படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான இவர், தமிழில் ரஜினி, சரத் குமார், பிரசாந்த் என பல நடிகருடன் இணைந்து நடித்துள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு வரை நடித்து வந்த இவர், அதன் பிறகு இந்திரகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து படங்களில் நடிப்பதை தவிர்த்தார். பல ஆண்டுகளுக்குப் பின் கடந்த 2017 ல், ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
தற்போது சமூக வலைதளங்களில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர், நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னை வந்துள்ளார். நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு இறுதி அஞ்சலி செலுத்த குடும்பத்துடன் வந்த இவர், அண்மையில் குடும்பத்துடன் கடற்கரை சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்து ரசிகர்கள், குடும்பமும் குட்டியுமாக என்ஜாய் செய்யும் ரம்பா என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்