இந்த வருடம் ஆரம்பித்த காலத்தில் இருந்தே பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். அதுவும் கொரோனா தொடங்கியதில் இருந்து மக்களின் பாடு திண்டாட்டமாக தான் உள்ளது. தற்போது தெலுங்கு நடிகரான ராம் சரணுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
ராம் சரண்
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ராம் சரண். இவருக்கென்று ஏகப்பட்ட ரசிகர்களும் உள்ளனர். தெலுங்கில் மட்டுமல்ல தமிழிலும் இவருக்கென்று ரசிகர்கள் உள்ளனர். தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார் ராம் சரண்.
அவர் நடித்த மகதீரா திரைப்படம் மாஸ் ஹிட் அடித்தது. தமிழில் அந்த திரைப்படம் மாவீரனாக மொழி பெயர்க்கப்பட்டது. தமிழிலும் இந்த படத்திற்கு ஏக வரவேற்பு. இப்படி தொடர்ந்து பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தவர் ராம் சரண்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது, தனக்கு டெஸ்ட் எடுத்தப்போது கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. என்னை சந்தித்தவர்கள் தயவு செய்து டெஸ்ட் எடுத்துக்கொள்ளுங்கள்.
Request all that have been around me in the past couple of days to get tested.
More updates on my recovery soon. pic.twitter.com/lkZ86Z8lTF— Ram Charan (@AlwaysRamCharan) December 29, 2020
வீட்டில் தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டுளேன் கூடிய விரைவில் குணமடைந்து வருவேன். என்று கூறியுள்ளார். இதனால் ராம் சரண் ரசிகர்கள் அனைவரும் வருத்தத்தில் உள்ளனர். அவர் விரைவில் குணமடைய பிராத்தனை செய்தும் வருகின்றனர்.