பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அசத்திய ரக்ஷிதா குறித்து முக்கிய தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.
ரக்ஷிதா
சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ரக்ஷிதா மகாலக்ஷ்மி. இவருக்கு கவினுக்கும் இடையே இருந்த அந்த ஜோடி பொருத்தம் ரசிகர்களை கவர்ந்தது. அந்த சரவணன் மீனாட்சி சீசனில் வேட்டு-ஜில்லு என்ற காம்பினேஷன் தான் அதிகம் பேசப்பட்டது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த சீரியலின் இரண்டாவது சீசன் தொடங்கப்பட்டாலும் அது அந்த அளவுக்கு ஹிட் கொடுக்கவில்லை. அதன் பிறகு வேறு சேனலுக்கு தாவினாலும், அந்த அளவிற்கு ரக்ஷிதாவிற்கு மவுசு கிடைக்கவே இல்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கவே தனது திறமையை காட்டி பலரின் நெஞ்சங்களில் இடம் பிடித்தார்.
துணிவை மிஞ்சிய வாரிசு,, 4 நாட்களில் வசூல் வேட்டை பார்த்து மிரண்டு போன படக்குழு?
இவர் வீட்டை விட்டு வெளியேறியது பலருக்கும் சோகத்தை தான் ஏற்படுத்தியது. இவர் வீட்டிற்குள் இருந்த வரையிலும், அவரது கணவர் தினேஷ் முழு சப்போர்ட்டாக இருந்தார். இப்படி இருக்க இப்பொழுது ரக்ஷிதா இன்னொரு திருமணத்திற்கு தயாராகி விட்டதாக செய்திகள் வலம் வருகிறது.
ஏற்கனவே தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக கூறப்பட்ட நிலையில் மீண்டும் திருமண விஷயம் வைரலாகி வருகிறது. ஒருவேளை இது உண்மையான தகவலாக இருக்குமோ என்று ரசிகர்கள் சந்தேகித்து வருகின்றனர்.