சின்னத்திரையில் கொடிகட்டி பறந்து வரும் நடிகை ரக்ஷிதா சில காலமாகவே முன்பை விட மாடர்னாக மாறிவிட்டார். பிரிவோம் சந்திப்போம், சரவணன் மீனாட்சி சீரியலில் ஆரம்பித்த இவரது சின்னத்திரை பயணம் இப்பொழுது வரை தொடர்ந்து வருகிறது. 10 வருடங்களுக்கு மேலாக நாயகியாகவே நடித்து வருகிறார்.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
சரவணன் மீனாட்சி சீரியலில் நடிக்கும் போதே ரக்ஷிதாவிற்கு வயதாகி விட்டதாக விமர்சனம் செய்ய ஆரம்பித்தனர். அதன் பிறகு நாச்சியார்புரம் என்ற சீரியலில் தனது கணவரான தினேஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ரக்ஷிதா. இப்படி இவரது வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்க எதிர்பாராத விதமாக தினேஷ்-ரக்ஷிதா பிரிந்து விட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.
அதற்கு ஏற்றார் போல ரக்ஷிதா தனியாக இருக்கும் புகைப்படங்களை தான் வெளியிட ஆரம்பித்தார். இப்பொழுது ஒரு அவார்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் ரக்ஷிதா படு மாடர்னாக கலக்கியுள்ளார். விவாகரத்துக்கு பின்னாடி இப்படி மாறிட்டிங்களே ரக்ஷிதா என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram